Date:04.12.2018
அன்புடைய பெற்றோருக்கு ,
வரும் சனிக்கிழமை (08.12.2018) நம் பள்ளியில், மழலையர் பள்ளி முதல் இரண்டாம் வகுப்பு வரை (Kindergarten, Grade-I &II ) உள்ள மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் (Parents Teachers Meeting- PTM) காலை 10.00 முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறவிருக்கிறது. உங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர் ஆசிரியரின் பங்கு எத்தனை முக்கியமானது என்பதை கலந்தாலோசிக்க இது ஒரு அவசியமான கூட்டம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். பிள்ளைகள் இது வரை எழுதிய தேர்வு தாள்களை பார்க்கவும் . வகுப்பறையில் அவர்களின் பழக்கங்களை பற்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த கூட்டத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
பள்ளி நிர்வாகம்
Date:10.12.2018
அன்புடைய பெற்றோருக்கு ,
பள்ளி கட்டணம் வங்கியில் செலுத்தியபின் தவறாமல் பள்ளி அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரியப்படுத்தினால் மட்டுமே மாணவர்களிடம் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும்.
Date:28.01.2019
அன்புடைய பெற்றோருக்கு ,
மாணவர்களின் நலன் கருதி நல்ல, பொறுப்புள்ள ,குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமுள்ள பெற்றோருக்கான தேர்வு நடைபெறுகிறது. பிள்ளைகள் தினமும்கொண்டுவரும் தின்பண்டம் (Snacks)மற்றும் மதிய உணவு(Lunch) வகுப்பாசிரியர்களால் கண்காணிக்க படும். சிறந்த இருபது பெற்றோர்கள் மட்டுமே இந்த ஆண்டின் பள்ளி ஆண்டு விழாவில் கௌரவிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் . பிள்ளைகளின் உணவு நாளை(29.01.2019- Tuesday) முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை கண்காணிக்க படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இது பிள்ளைகளின் ஆரோக்யத்திற்காகவே பள்ளியில் எடுக்கப்படும் பிரத்யேக முயற்சியாகும்.
Date:20.08.2019
அன்புடைய பெற்றோருக்கு,
நம் பள்ளியில் வரும் வெள்ளிக்கிழமை(23.08.2019) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடவிருக்குகிறோம். உங்கள் பிள்ளைகளை ராதை, யசோதை மற்றும் கிருஷ்ணரை போல அலங்கரித்து பள்ளிக்கு 9.30 மணிக்குள் அனுப்பவும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அலங்காரத்தை முடித்து பள்ளிக்கு வர வேண்டும். பிள்ளைகளின் அலங்காரத்திற்கேற்ப பள்ளியின் சார்பாக மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
குறிப்பு: இது மழலையர் பள்ளிக்கு மட்டுமே நடத்தப்படும்(Only for Pre- KG, Jr.KG and Sr.KG). இது கட்டாயமல்ல
Date:17.09.2019
அன்புடைய பெற்றோருக்கு,
இன்று நம் பள்ளியில் மழலையர் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு வைட்டமின் எ மருந்து திருக்கனுரின் ஆரம்ப சுகாதார நிலையத்தினால் கொடுக்கப்பட்டது.
திருக்கனுரின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து நம் பள்ளியில் ஐந்து வயது(ஒன்றாம் வகுப்பு), பத்து வயது (ஐந்தாம் வகுப்பு) மற்றும், பதினைந்து வயதுள்ள (பத்தாம் வகுப்பு ) பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது . கீழே குறிப்பிட்டுள்ள இடத்தில்கையொப்பமிட்டு உங்கள் ஒப்புதலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
இந்த ஊசி ஏற்கனவே போடப்பட்டிருந்தால் இதனை தவிர்க்கவும்.
Date:19.09.2019
அன்புடைய பெற்றோருக்கு,
உங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக நாங்கள் நடத்தவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் நீங்கள் கட்டாயம் கலந்துகொண்டு, உங்கள் ஒத்துழைப்பையும், கருத்துகளையும் தெரிவிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம். வருகின்ற பள்ளி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற இந்த கூட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் கட்டாயமாக பெற்றோர்கள் வரும் வெள்ளிக்கிழமை (20.09.2019) மாலை 3.00 மணிக்கு பள்ளிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
பள்ளி நிர்வாகம்
Date:20.09.2019
Dear Parents,
This is to inform you that the classes for JEE and NEET has commenced already and is attended by your child.
We would like to know whether you would like to take only JEE or NEET or Both. Kindly fill the consent slip and sign it accordingly to help us arrange for the classes.
i)Only JEE
ii)Only NEET
iii)Both JEE and NEET
Date:20.09.2019
Dear Parents,
This is to inform you that there will be s Science Exhibition /Fair 2019-20 by CBSE Chennai for 3 days under the following topic
Themes | Sub-Themes |
---|---|
Science and Technology for Sustainable Development with a Thrust on Water Conservation | 1. Sustainable Agricultural Practices 2. Cleanliness and Health 3. Resource Management 4. Industrial Development 5. Future Transport and communication 6. Educational Games and mathematical Modelling 7. Others |